Saturday 10 October 2015

Bible Study :God knows all

வேதபாடம் : "கர்த்தர் சகலத்தையும் அறிந்திருக்கிறார்."
வேதபகுதி சங்கீதம் 139 முழுவதையும் ஜெபத்துடனும் தியானத்துடனும் வாசியுங்கள்.
1. சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
I யோவான் 3: 20 நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
2. நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்.
சங்கீதம் 44:20  நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,
44:21  தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே
சங்கீதம் 1: 6  கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.
3. உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்.
சங்கீதம் 37:18  உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
4. யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.
சங்கீதம் 94:11  மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.
5. நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
நாகூம் 1:7  கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
6. தேவைகளை அறிந்திருக்கிறார்.
மத்தேயு 6:8  அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
7. சோதனையினின்று இரட்சிக்கவும் அறிந்திருக்கிறார்.
II பேதுரு 2:9  கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
8.தம்முடையவர்களை அறிந்திருக்கிறார்.
II தீமோத்தியு 2:19  ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.


No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord