Wednesday 30 September 2015

Thanksgiving prayer

நன்றி ஜெபம்"
சங்கீதம் 50:23 ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.
அன்பின் ஆண்டவரே நீர் கடந்த ஒன்பது மாதங்கள் முழுவதும் எனக்கு செய்த அனைத்து காரியஙகளுக்கும் உமக்கு நன்றி.
என்னுடைய நன்றிகள் உம்மை மகிமைபடுத்துவதாகவும் மகிழவிக்க கூடியதாகவும் இருக்கட்டும்.அன்பின் ஆண்டவரே,
எப்போதும் என்னை மன்னிக்கும் உமது அன்பிறகாய் நன்றி.உமது வேதவார்த்தைகளுக்காய் உமக்கு நன்றி கூறுகிறேன் உமது வார்த்தைகள் என் கண்களை திறந்து உமது வேத உண்மைகளை புரிந்துக்கொள்ள செய்தமைக்கு நன்றி.உமது வார்த்தைகள் என் கால்களுக்கு  விளக்காகவும் நான் செல்லும் பாதைக்கு வெளிச்சமும் ஆகும்.அன்பின்ஆணடவரே நீர் உமது விலை மதிக்கப்படாத இரத்தத்தினால் என்பாவங்களi கழுவியமைக்காய் உமக்கு நன்றி.உமது பரிசுத்த இரத்தம் என்னை என்நோய்களில் இருந்தும் குனப்படுத்தியதற்காய் உமக்கு நன்றி.நன்றி ஆணடவரே உமது இரத்தம் என் வாழக்கையில் வெற்றியை  தந்து அனைத்திலும் வெற்றியின் கனிகளை தந்தமைக்கு உமக்கு நன்றி.அன்பு தேவனே நீர் எனக்கு விலையுயர்ந்த பரிசினை தந்தமைக்காகவும் என்னை ஆசீர்வதித்து  நிலையான வாழ்வை தந்ததற்காகவும் உமக்கு நன்றி.என்மீது நீர் வைத்துள்ள அன்பு மிகவும் ஆழமானது அளக்கமுடியாத அளவிற்கு  உயர்வான அன்பு.ஆண்டவரே உமது காயங்னளால்  எனக்கு வெற்றியை கொடுத்துள்ளீர்.நீர் என் பாவங்களை உம் தோல்களில் சுமந்து சிலுவையில் இறந்து என்னை பாவங்களில் இருந்து இரட்சித்தீர்.நான் என் வாழக்கை முழுவதும் உமக்க நன்றியோடு இருப்பேன்.
உமக்கு நன்றிப் பாடல் பாடுவேன்.ஆண்டவரே நான் உமக்கு எவ்வளவு நன்றி கூறுவேன். நீ என்னிடம் எதிர்பார்பதோ என் வாழ்நாள் எல்லாம் என் அன்பு தியாகம் ஸ்தோத்திரம் மட்டுமே.இயேசுவின் நாமத்தில் நான் உம்மைப்போற்றுகிறேன்; புகழ்கிறேன் வாழ்துகிறேன் .ஆமென்

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord