"தினசரி வாழ்க்கையின் தேவனின் வாய்ப்புகள்"
தேவனை நம்புகிறவர்கள் ஏமாறுவது இல்லை. அந்தப்படியே:
இதோ தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது. ( பேதுரு:2:6)
கர்த்தரை நோக்கி, என் விருப்பம் அல்ல உன்விருப்பம்போல் ஆகட்டும் என்று உன்னால் கூற இயலுமா?
உன்னை முழுவதுமாக முழு இதயத்தோடு இறைவனின் கரங்களில் கொடுக்க முடியுமா?
நீ உனக்கு தேடுவதைவிட, கண்டுக்கொண்டதைவிட, மேலானதை தேவன் உனக்கு தருவார். என நம்புகிறாயா? விசுவசிக்கிறாயா? இதைப்புரிந்துக்கொள்வது கடிணமானது.
ஆனால் இவ்வழியில் தான் இறைவன், நமக்க கற்றுக்கொடுக்கின்றார்.முழுவதுமாக ,நீ தேவனை சார்ந்து இரு.தேவனின் அன்பு, ஞானம், அருள், உமக்ககிடைக்கும் தேவனிடத்தில் நம்பிக்கை வை. நீ இன்று இருப்பதற்கு காரணம் தேவனின் அன்பும், அவரிடத்தில் உனக்குள்ள விசுவாசமே,கடவுள் உணக்கு நம்பிக்கையின் வாய்ப்பை கொடுக்கின்றார்.
நீ தேவனை விசவசிப்பாயா? இல்லை உன் விருப்பமான வழியை தேடிச்செல்வாயா? உன் வாழக்கையில் வரும் ஒவ்வொறு காரியங்களையும் தேவன் உன்னை உண்மையான சீடனாக்குவதற்காக தேவன்க்கொடுக்கும் பயிற்சிச்சியே.
நீ விசுவசிக்கின்றாயா? நீ தேவனிடம் எது நடந்தாலும் பராவாயில்லை நீ எனக்கு கற்றுக்கொடும் இறைவா, நான் உன்னை விசுவசிக்கிறேன் என்று உன்னால் கூற முடியுமா? தேவனின் திட்டத்திற்கு உன்னை கொடுப்பதைவிட, மேலானா பெரிய காரியம் ஒன்றம் இல்லை.உன்வாழ்கையிள் உண்மையான தேவனின் அன்பைப்பெற ஓரே வழி இதுவே.
ஜெபம்
அன்புள்ள ஆண்டவரே நான் உம்மை நம்புகிறேன் நீ என்னை நல்ல வழியில் நடத்துவீர் என்று.நான் கேட்பதற்கம் நினைப்பதற்கும் மேலாக நீர் எனக்குக்கொடுப்பீர். என நான் முழு விசவாசத்துடன் நம்புகிறேன்.நம்பிக்கையோடு நீ என்னை வழிநடத்தவதற்காய் உமக்கு நன்றி இயேசுவே.ஆமென்.
தேவனின் பிரசனத்தில், உன் விருப்பத்ததை அன்றி தேவனின் விருப்பத்தை தேடு.
No comments:
Post a Comment