Thursday 2 July 2015

Today's prayer

அன்பு தேவனே!  இந்த நாளிலே எனக்காக நீர் செய்திருக்கிற சகல காரியங்களுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னுடைய  நன்றியறிதல் உம்முடைய பார்வையில் மகிழ்ச்சியூட்டுவதும் ,  சந்தோஷமானதாகவும் அமைவதாக. என் தேவனே!  என் வாழ்க்கை முழுவதும் என்னைப் பொறுத்தருளும் உமது கிருபைக்காக நன்றி செலுத்துகிறேன். புரிந்துகொள்ளுதலை நோக்கியும் ,  சத்தியத்தை நோக்கியும் என் கண்களைத் திறக்கும் உம்முடைய  உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய வார்த்தையே என் காலுக்கு தீபமாகவும்,பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது.   
என்னுடைய எல்லாப் பாவங்களிலிருந்தும்  ,  ஒழுங்கின்மைகளிருந்தும் ,  மீறுதல்களிலிருந்தும் என்னைக் கழுவும் உம்முடைய விலையேறப்பெற்ற ரத்தத்திற்காக ஏசுவே உமக்கு நன்றி செலுத்துகிறேன் .  உம்முடைய ரத்தம் என்னை எல்லாவித பலவீனங்களிலிருந்தும் ,  நோய்களிலிருந்தும் குணமாக்கவும் செய்கிறது. உம்முடைய ரத்தம்  என் வாழ்வில் வெற்றியைத் தந்து  ,  நான் சகித்துக் கொண்டிருந்த அனைத்திலுமே என்னை ஒரு வெற்றியாளனுக்கு மேலானவனாய் ஆக்குவதற்காக கர்த்தர்  ஏசுவே! உமக்கு நன்றி செலுத்துகிறேன்.  மாபெரும் விலை கொடுத்து என்னை வாங்கி  அழிவில் இருந்து என்னைக்  காத்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.என் மீது நீர் கொண்ட  அன்பு எத்தனை ஆழமானது!  அது எல்லைகளைத் கடந்து நிற்பது.  உம்முடைய காயங்களால் ,  ஏசுவே! இந்த நாளிலே என்னை  உம்முடைய  மகிமைக்குள் கொண்டு வந்திருக்கிறீர். என்னுடைய பாவங்களை  உம்முடைய தோளில் சுமந்து   , சிலுவையிலே மரித்து ,  என்னுடைய வாழ்க்கை மூழ்கிப் போய்விடாமல் காத்தீர் .  என் வாழ்வை நீர்  பொக்கிஷமாக்கினீர். என் வாழ்க்கை முழுவதும் நான் நன்றி செலுத்தும்படியாகவும் ,  நன்றியறிதலுள்ளவனாகவும் நிரப்பப் பட்டிருக்கிறேன்.  என் தேவனே!  எவ்வளவிற்கு நான் உம்மைப் பாராட்டுவேன்!  நீரே என்  அன்பையும்,  வாழ்நாள் முழுவதும் நான் ஸ்தோத்திர பலிகளை செலுத்துவதையும் மட்டுமே எதிர்பார்க்கிறீர் . தகப்பனே உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஏசுவின் நாமத்தில் சகல துதி,  கணம்,  மகிமை யாவற்றையும் செலுத்துகிறேன்.  ஆமேன்! ! !

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord