இன்றயை தியான வசனமும், ஜெபமும்
தியானத்திற்கு: கர்த்தர் என் மேல் பிரியமாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும் ?
தியான வசனம் : தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.- (சங்கீதம் 147:11)
ஜெபம் :
எங்கள் அன்பின் பரம தகப்பனே,
நீர் கிருபையுள்ளவர். இரக்கமுள்ளவர். சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு உமது வசனத்துக்கு நடுங்குகிறவனை நோக்கிப் பார்க்கிற தெய்வம். உமக்கு பயந்து, உமது கிருபைக்காக காத்து, அதை சார்ந்து இருக்கிற, ஒவ்வொரு உமது பிள்ளைகளின் மேலும், நீர் பிரியமாக இருப்பதால், உமக்கே துதி, ஆராத னை, நன்றி பலிகள் இன்றும் ,என்றும், எப்போதும் உண்டா வதாக.
அப்பா, இந்த இடத்திலும், வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைக்கச் செய்வது மட்டுமல்லாது, மிருகஜீவன்களுக்கும், கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங் கொடுக்கிற தெய்வமாகிய நீர், குதிரையின் பலத்தில் விருப்பபடாமல், வீரனுடைய கால்களில் பிரியப்படாமல், கர்த்தராகிய உமக்குப் பயந்து, உமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல், நீர் பிரியமாக இருக்கிற தெய்வம் என்று சங்கீதக்காரன் சொல்லு வதைப் பார்க்கிறோம்.
உமது பிள்ளைகளாகிய நாங்கள், எங்களது வேலையில், படிப்பில், அந்தஸ்தில், குலத்தில், மேன்மைப் பாராட்டி, எங்க ளது சரீர பெலன், சுகம் மற்றும் புத்தி அறிவைக் குறித்து, மேன்மைபாராட்டி பெருமையோடு வாழ்ந்து, எங்களது உற்றார் உறவினர்கள் நண்பர்கள் எங்களைக் கண்டு, பொறாமை, எரிச்சல் கொண்டு பகைத்து, வெறுத்து பிரியமில்லாமல் நடப்பதினால், நாங்கள் மனம் நொந்து, ஏன் எல்லாரும் என்னை பகைக் கிறார்கள், காரணமில்லாமல் சத்துருக்களாக மாறுகிறார்களே, நான் அன்பைத் தேடி போனாலும் அவர்கள் வெறுப்பை காண்பிக்கிறார்களே, ஒரு மனிதனுக்கு கூட என்னை பிடிக்கவில்லையே என்று எங்களை நாங்களே வெறுத்து, என் வாழ்க்கை முழுவதும் இப்படிதான் இருக்குமோ, யாருமே என்மேல் மெய்யான அன்பை, பிரியத்தை காட்ட மாட்டார்களோ என்று இருதயத்தில் விசாரப்பட்டு, கவலையோடு காணப்படுவோமேன்றால், நீர் பெருமை உள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிற தெய்வம், மேட்டிமையானவனையோ தூரத்திலயே அறிகிற தெய்வம். நீர் எங்களை தெரிந்து கொள்ளும்போது, எங்களது அறிவை, புத்தியை, செல்வத்தை பார்த்து அல்ல, தாழ்விலே எங்களை தெரிந்து கொண்டவர். எங்களுக்கு இருக்கும் எல்லா காரியமும், உமது கிருபையால்தான் வந்தது என்று நினைவு கூர்ந்து, எங்கள் வாழ்நாட்கள் எல்லாம், உமக்குப் பயந்து, உமது கிருபைக்கு காத்து இருந்து, விலை மதிக்கமுடியாத உமது பிரியத்தை பெற்று, தானியேல் உமக்கு பிர்யமானவனாக நடந்து கொண் டது போல, நாங்களும் உமக்கு பிரியமாக நடந்து, எங்கள் தேவன் ஒருவரே, தமக்குப் பயந்து, தமது கிருபைக்கு காத்து இருக்கிறவர்கள் மேல் பிரியமாக இருக்கிற தெய்வம் என்று, உம்மை மகிமைபடுத்த கிருபை செய்வீராக.
ஐயா, உம்மை அறியாமல், எல்லாராலும் வெறுக்கப்பட்டு, என் மேல் அன்பு செலுத்த பிரியமாக இருக்கு இந்த உலகில் யாருமே இல்லையா, என்று மனம் துவண்டு போய், கவலை, கண்ணீ ரோடு காணப்படும் ,ஒவ்வொரு நபரும் உம்மை காண, ரட்ச்சிக் கப்பட, உமக்கு பயந்து, உமது கிருபைக்கு காத்து இருந்து, உமது பிரியத்தைப் பெற்று, எங்கள் கர்த்தர் ஒருவரே எங்கள் மேல் பிரியமாக இருக்கிறவர் என்று உம்மை மகிமைபடுத்த கிருபை செய்வீராக.
இயேசுக் கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
No comments:
Post a Comment