Friday 4 September 2015

விடுதலைக்கான ஜெபம்!

விடுதலைக்கான ஜெபம்!
(மாந்திரீகம், பில்லிசூனியக்கட்டுகளிலிருந்து விடுதலைப்பெற)
எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தையுடைய தேவனே! உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன்!
இயேசுவே! என்னுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை உம்முடைய கரங்களில் அர்ப்பணிக்கிறேன். என்னை முழுவதுமாக நீர் ஆளுகை செய்வீராக. நீர் எனக்காக சிலுவையில் சிந்திய உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் என்னை மறைத்துக் கொள்ளும். சத்துருவின் எல்லாவித பயத்துக்கும் நீக்கி என்னை விடுவித்தருளும்.
எல்லாவித தீங்குகளுக்கும் என்னை விலக்கி காத்துக்கொள்ளும். பிசாசின் சகல வல்லமைகளையும் அழிக்கும்படி வந்த இயேசுவே, எனக்கு விரோதமாய் செயல்படுகிற பில்லி சூனியக்கட்டுகள் இயேசுவின் நாமத்தினால் உடைவதாக!
என் மீது தயவாய் மனமிரங்கும். இயேசுவே உம்முடைய இரத்தத்தினால் சத்துருவை ஜெயிக்க உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் சத்துருவின் வல்லமைகள் விலகட்டும். உம்முடைய இரத்தத்தினால் என்னை மூடிக்கொள்ளும். எனக்கு விரோதமாக எழும்புகிற சத்துருவின் வல்லமைகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெயிக்கிறேன்.
இயேசுவே! நீர் என் பிரார்த்தனையைக் கேட்டு விடுதலை தந்ததற்காக உமக்கு நன்றி சொல்லுகிறேன். இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன் ஜீவனுள்ள பிதாவே. ஆமென்!

‘சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார். (ரோமர் 16:20) 

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord