Wednesday 15 July 2015

Today's devotion

இன்றைய தியானம்.
 
சேனைகளுடைய கர்த்தர் அவனோடேகூட இருந்தார். - 1 நாளாகமம் 11:9
 
கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே,
இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
 
பிரியமானவர்களே, தாவீது நாளுக்குநாள் விருத்தியடைய காரணம் சேனைகளுடைய கர்த்தர் அவனோடேகூட இருந்தார் என்று 1நாளா.11:9ல் வாசிக்கிறோம். 2சாமு.3:1ல் தாவீது வரவர பலத்தான். சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப் போனார்கள் என்ற வாசிக்கிறோம். நெடுநாளாய் சவுலின் குடும்பத்திற்கும், தாவீதின் குடும்பத்திற்கும் யுத்தம் நடந்தது. ஆனால் சேனைகளுடைய கர்த்தர் தாவீதோடே கூட இருந்தார்.
 
இதை வாசிக்கும் எனக்கு பிரியமானவர்களே, நீங்களும் அநேக யுத்தங்களையும், போராட்டங்களையும் சந்தித்துக்கொண்டிருக்கிறீர்களோ? ஒன்றை மாத்திரம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 1நாளா.9:20ல் பினேகாசுடனே கர்த்தர் இருந்தபடியினால் அவன் முற்காலத்திலே அவர்கள் மேல் விசாரணைக்காரனாய் இருந்தான் என்று வாசிக்கிறோம். சங்.46:7,11லும் சேனைகளுடைய கர்த்தர் நம்மோடே இருக்கிறார் என்று சங்கீதக்காரன் எழுதிவைத்திருக்கிறான்.
 
எனக்கன்பானவர்களே, சேனைகளுடைய கர்த்தர் மாத்திரம் உங்களோடேகூட இருக்கிறாரா என்று ஆராய்ந்துக் கொள்ளுங்கள். சேனைகளுடைய கர்த்தர் கூட இருந்தால், நிச்சயமாகவே தாவீதைப்போல நீங்கள் வரவரப் பலத்துப் காணப்படுவீர்கள்.
 
பிரியமானவர்களே, அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 8:31ல் எழுதினபடி தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு விரோதமாய் இருப்பவன் யார்? உங்களுக்கோ, உங்கள் குடும்பத்திற்கோ, உங்கள் தொழிலுக்கோ எதற்கு விரோதமாய் கொந்தளித்து சத்துருக்கள் எழும்பினாலும் தைரியமாய் வாக்குத்தத்தத்தை அறிக்கை செய்து ஏசா.41:10,14ன்படி நான் பயப்படமாட்டேன். சேனைகளின் கர்த்தர் என்னோடேகூட இருக்கிறார், எனக்கு துணைநிற்கிறார் என்ற ஒரு விசுவாசம் உங்களுக்குள் இருக்குமென்றால் நீங்கள் 2சாமு 5:10ன்படி தாவீதைப்போல வரவர விருத்தியடைவீர்கள்.
 
இதை வாசிக்கும் பிரியமானவர்களே, யோபு 17:9ல் நீதீமான் தன் வழியை உறுதியாய் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துபோவான் என்ற வார்த்தையின்படியும் நீங்கள் விருத்தியடைய கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார்.
 
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களோடிருப்பாராக, உங்களை நடத்துவாராக. 

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord