தியானம் :" இல்லை,இல்லை,இல்லை."
வெளி : அதிகாரம் 21 : 4
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
1. நீங்கள் போகும்போது வெறுமையாய்ப் போவதில்லை.
2. நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை.
3. நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை.
4. நான் உன்னை வெறுத்துவிடவில்லை.
5. இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.
6. நான் உன்னை மறப்பதில்லை.
7. கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை.
8. நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை.
9. கர்த்தருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
10. தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.
11. என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.
12. நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை.
13. என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.
14. நான் கர்த்தர் நான் மாறாதவர்; ஆகையால் நீங்கள் நிர்மூலமாகவில்லை.
15. நான் உன்னைக் கைவிடுவதுமில்லை.
16.இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.
17. நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா.
18. அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
19. கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
20. அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை.
Evangelist R. Chandrasekaran.
No comments:
Post a Comment