Tuesday 30 June 2015

இயேசு கிறிஸ்துவின் இதயத்திலிருந்து :

இயேசு கிறிஸ்துவின் இதயத்திலிருந்து : 
நான் உன்னை ஆறுதல்படுத்துவேன். நானே ஒளி . என்னில் நட , நீ அனைத்தையும் காண்பாய். உனது முயற்சியின் அலைகள் உன்னை மோதித் தள்ளும்போது, புயலை அமைதிப்படுத்த ஆயத்தமாய் நான் அங்கே இருக்கிறேன்.  என்னுடைய வார்த்தைக்காகக் காத்திரு, நான் பேசியிருந்தால் , அங்கே ஒரு பெரிய அமைதல்  உண்டாயிருக்கும். அது வரை  அலைகளைகளைத் தழுவியபடி இரு. நான் என்னுடைய சீஷர்களைப் புயலுக்கு நடுவே, கடலில் சந்தித்ததை நினைவு கூருவாயாக. உன்  வாழ்க்கையின் புயல் தன்னுடைய  வலிமையின் உச்சத்தை  அடையும்போது,  உன்னுடைய பாதுகாவலர்  உன்னை நோக்கி அவைகளின் மீது வந்து கொண்டிருப்பதாலும் , விரைவாய் உன்னை மீட்டெடுக்கப் போவதற்காகவும். மகிழ்ந்து அளவுக்கு மிகுதியாய்ப் பெருமிதம் கொள்.அது வரை என்னில் விசுவாசம் கொள், நான் என்னுடைய தழுவுதலால் உன்னைத் தேற்றுவேன். 
உங்கள் சிந்தனைக்கு...
ஏசாயா 41: 10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
ஏசாயா 66:13 ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.
யோவான் 16: 33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
புனிதர்

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord