இன்றைய தியானம்
உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் காலை வணக்கங்கள்.
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
ஜெபம் : எங்கள் அன்பின் ஆண்டவரே,சர்வவல்லமையுள்ள தேவனே இந்த தியானத்தை வாசிக்கிற தியானிக்கிற அனைவரையும் ஆசிர்வதியும்.உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!
இயேசுக் கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
சங்கீதம் 91:2 நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
இந்த வசனத்திலே நம்முடைய தேவனுக்கு நான்கு பெயர்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த உலகத்த்திலே மிகவும் பாதுகாப்பான இடம் உன்னதமானவரின் மறைவில் இருப்பதுதான்.
உன்னதமானவர் என்றால் Elyon -Most High God.கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.
1. கர்த்தர் என் அடைக்கலம்.
சங்கீதம் 46:1. தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
2. கர்த்தர் என் கோட்டை.
நாகூம் 1: 7. கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
3. கர்த்தர் என் தேவன்.
சங்கீதம் 118:28. நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.
29. கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.4. கர்த்தர் நான் நம்பியிருக்கிறவர்.
சங்கீதம் 130: 5. கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
No comments:
Post a Comment